சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 600 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினரால் 2024 மார்ச் மாதம் 25 ஆம் திகதி நீர்கொழும்பு தடாகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 600 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒரு டிங்கி படகு கைப்பற்றப்பட்டது.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பகுதியை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி 2024 மார்ச் மாதம் 25 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் கௌனி நிறுவனத்தின் கடற்படையினர் நீர்கொழும்பு தடாகப் பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் தடாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்று அவதானித்து பரிசோதித்தனர். அங்கு, டிங்கி படகில் இருந்த இருபத்தி இரண்டு (22) பைகளில் அடைக்கப்பட்ட அறுநூறு (600) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு (01) ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு கலால் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.