சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற 05 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் இன்று (04 ஏப்ரல் 2024) அதிகாலை மன்னார் ஆச்சங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி இரவு சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற ஐந்து பேருடன் (05) சுமார் ஐந்நூற்று எண்பத்தி ஒன்பது (589) கடல் அட்டைகள், மூன்று (03) மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, இன்று (2024 ஏப்ரல் 04) வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் புஸ்ஸதேவ நிருவனத்திற்கு சொந்தமான ஆச்சங்குளம் கடற்படை பிரிவின் கடற்படையினர் மன்னார் ஆச்சங்குளம் பகுதியில் மேற்கொண்டுள்ள இந்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மூன்று ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்தனர் அங்கு ஐந்நூற்று எண்பத்தி ஒன்பது (589) கடல் அட்டைகள், ஐந்து (05) சந்தேக நபர்கள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் மூன்று (03) மோட்டார் சைக்கிள்கள் இவ்வாரு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஐவர் (05) கடல் அட்டைகள், மூன்று (03) மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.