நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற 05 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் இன்று (04 ஏப்ரல் 2024) அதிகாலை மன்னார் ஆச்சங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி இரவு சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற ஐந்து பேருடன் (05) சுமார் ஐந்நூற்று எண்பத்தி ஒன்பது (589) கடல் அட்டைகள், மூன்று (03) மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

04 Apr 2024