நடவடிக்கை செய்தி

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

திருகோணமலை, ரதுகல கடற்பகுதியில் 2024 ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு பேருடன் (07) ஒரு டிங்கி படகு (01) மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டது.

05 Apr 2024

சட்டவிரோதமாக விற்பனைக்கு தயார்படுத்தப்பட்ட 5033 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கல்முனையில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 2024 ஏப்ரல் 04 ஆம் திகதி கல்முனை பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது முறையான அனுமதிப்பத்திரம் இன்றி விற்பனைக்கு தயார்படுத்தப்பட்ட ஐயாயிரத்து முப்பத்து மூன்று (5033) வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

05 Apr 2024