வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் கடற்படையின் தொடர்ச்சியான பங்களிப்பு

சீரற்ற காலநிலையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள கடற்படையின் அனர்த்த மீட்புக் குழுக்கல் 2024 ஜூன் 07 ஆம் திகதி அனர்த்த நிவாரணப் பணிகளைத் தொடர்ந்தன, மேலும் அனர்த்த நிவாரணம் வழங்குவதற்காக பதின்மூன்று (13) அனர்த்த நிவாரணக் குழுக்களை நியமித்தனர்.

அதன்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 316 பேரை கவனமாக மீட்கும் பணியில் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். மேலும் 4,900 பேருக்கு படகுகள் மூலம் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை வழங்கியதோடு, பாதிக்கப்பட்ட 19,000க்கும் மேற்பட்டோருக்கு உலர் உணவுகள் மற்றும் பானங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேலும், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் கிணறுகளை சுத்தப்படுத்தும் பணியிலும் கடற்படை நிவாரணக் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.