சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 1713 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

கல்பிட்டி முதலப்பாய் கடற்பகுதி மற்றும் நுரைச்சோலை கடற்கரை பகுதியில் 2024 ஜூன் மாதம் 28 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது முதலப்பாய் கடற்பகுதியில் மிதந்த மற்றும் நுரைச்சோலை கரையோரப் பகுதியிலுள்ள சிறிய காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1713 கிலோ பீடி இலைகள் கொண்ட ஒரு தொகுதி (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடல் வழியாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பகுதியில் பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் 2024 ஜூன் 28 ஆம் திகதி கல்பிட்டி முதலப்பாய் கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் மிதந்த பதினான்கு (14) பொதிகளில் இருந்த ஐந்நூற்று பதின்மூன்று (513) கிலோகிராம் பீடி இலைகளும் (ஈரமான எடை) மற்றும் நுரைச்சோலை கடற்கரை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் உள்ள புதருக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த முப்பத்து மூன்று (33) பைகளில் சுமார் ஆயிரத்து இருநூறு (1200) கிலோகிராம் பீடி இலைகளும் உட்பட மொத்தம் 1713 கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை, கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.