கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், 'MV KOTA CAMIL' கப்பலில் கொண்டு வரப்பட்ட “Devon 5” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் பாதிக்கப்பட்ட மீனவரை விஜயபாகு கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், பல நாள் மீன்பிடிக் கப்பலான "டெவோன் 5" யில் ஆபத்தான நிலையில் இருந்த இரண்டு (02) மீனவர்கள் இன்று (2024 ஜூன் 30), காலை 'MV KOTA CAMIL' என்ற வணிகக் கப்பல் மூலம் மீட்கப்பட்டதுடன், மீட்கப்பட்ட இருவரில் (02) ஒருவர் (01) 'MV KOTA CAMIL' கப்பலிலேயே உயிரிழந்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த மற்றைய மீனவர் இன்று (2024 ஜூன் 30,) தேவுந்தரவிலிருந்து 170 கடல் மைல் (சுமார் 314 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் இலங்கை கடற்படை கப்பலான விஜயபாகு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டார்.

மேலும், விஜயபாகு கப்பலில் இருந்த கடற்படை மருத்துவ குழுவினர் ஆபத்தான நிலையில் உள்ள மீனவருக்கு அவசர சிகிச்சை அளித்து வருவதுடன், 'MV KOTA CAMIL' கப்பலில் உயிரிழந்த மீனவரின் சடலத்துடன் விஜயபாகு கப்பல் தற்போது தரையிறங்க உள்ளது.