சட்டவிரோதமான முறையில் 1373 கிலோகிராம் உலர் மஞ்சளை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

கடற்படையினரால் இன்று (2024 ஜூலை 10,) புத்தளம் பள்ளியவாசல்பாடு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1373 கிலோகிராம் உலர் மஞ்சளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேகநபர்கள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் உட்பட பல சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி கடற்படை ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி இன்று (2024 ஜூலை 10,) அதிகாலை இலங்கை கடற்படையின் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான தம்பபன்னி என்ற நிறுவனத்தின் கடற்படையினர் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் கடற்கரைக்கு வந்த படகு ஒன்று அவதானித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நாற்பத்து நான்கு (44) பைகளில் அடைக்கப்பட்ட 1373 கிலோ 700 கிராம் உலர் மஞ்சள் பொதியுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் ஒரு டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் (02), ஆயிரத்து முன்னூற்று எழுபத்து மூன்று (1373) கிலோ எழுநூறு (700) கிராம் காய்ந்த மஞ்சள் மற்றும் டிங்கி படகு (01) ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.