சட்டவிரோதமான முறையில் 477 கிலோகிராம் உலர் மஞ்சள் கையிருப்பு கல்பிட்டியில் கடற்படையினரால் கைது

கடற்படையினர் இன்று(2024 ஜூலை 11,) கல்பிட்டி பராமுனே தீவில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டுவரப்பட்டதென சந்தேகிக்கப்படும் சுமார் நானூற்று எழுபத்தி ஏழு (477) கிலோகிராம் உலர் மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடல் வழியாக மேற்கொள்ளும் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை ஒடுக்கும் வகையில், தீவைச் சுற்றியுள்ள கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, 2024 ஜூலை மாதம் 11 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான விஜய நிறுவனத்தினால் கல்பிட்டி பராமுனே தீவில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான பதினைந்து (15) பைகள் சட்டவிரோதமான முறையில் தீவில் மறைத்து வைக்கப்பட்டு, கடல் வழியாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, அதில் அடைக்கப்பட்டிருந்த சுமார் நானூற்று எழுபத்தி ஏழு (477) கிலோகிராம் உலர் மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சுமார் நானூற்று எழுபத்தி ஏழு (477) கிலோகிராம் உலர் மஞ்சள் கையிருப்பு, மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.