போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து 2024 ஜூலை 17 ஆம் திகதி திருகோணமலை அபயபுர சந்தி பகுதியில் மேற்கொண்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட முந்நூற்று ஐம்பது (350) Pregabalin போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் மகாவலி நிறுவனத்தின் கடற்படையினர், சர்தபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து 2024 ஜூலை 17 ஆம் திகதி திருகோணமலை அபயபுர சந்தியில் மேற்கொண்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு குறித்த நபரின் உடமையில் விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட சுமார் முந்நூற்று ஐம்பது (350) Pregabalin போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நடவடிக்கையின் மூலம், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலையைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01) மற்றும் போதைமாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.