சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1780 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஜூலை மாதம் 24 ஆம் திகதி மாலை நீர்கொழும்பு தடுகம தடாகத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து எழுநூற்று எண்பது (1780) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் ஆறு (06) டிங்கி படகுகளும் கைது செய்தனர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பகுதியை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, 2024 ஜூலை 24 ஆம் திகதி மாலை நீர்கொழும்பு தடுகம தடாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கௌணி நிறுவனத்தின் கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான ஆறு (06) டிங்கி படகுகள் அவதானித்து பரிசோதித்தனர். அங்கு, குறித்த டிங்கி படகு ஒவ்வொன்றிலும் எழுபத்தாறு (76) பைகளில் பொதி செய்யப்பட்ட ஆயிரத்து எழுநூற்று எண்பது (1780) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும், ஆறு (06) டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் அளுத்குருவ மற்றும் வென்னப்புவ பிரதேசங்களில் வசிக்கும் 25 மற்றும் 41 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேகநபர்கள் (02), சுமார் ஆயிரத்து எழுநூற்று எண்பது கிலோகிராம் (1780)பீடி இலைகள் மற்றும் ஆறு (06) டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு கலால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.