கல்பிட்டி தோரயடி குளத்தில் மூழ்கி கிடந்த 04 கிலோ 740 கிராம் தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

2024 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி கல்பிட்டி தோரயடி குளத்தில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடத்தல்காரர்களினால் குளத்தில் மூழ்கடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 04 கிலோ 740 கிராம் தங்கம் அடங்கிய பொதியொன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த தங்கம் அடங்கிய பொதியை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றும் தோரயடி கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடல் வழியாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினரால் இலங்கையைச் சுற்றியுள்ள கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றது.

இதன்படி, வட மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர், கல்பிட்டி தோரயடி குளத்தில் 2024 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி மேற்கொண்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, குளத்தில் மூழ்கிய நிலையில் கிடந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்று பரிசோதிக்கப்பட்டது. அங்கு, குறித்த பையில் பொதி செய்யப்பட்டிருந்த 04 கிலோ, 740 கிராம் தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், தங்கம் அடங்கிய பொதியை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகு ஒன்றும் (01) தோரயடி கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரின் நடவடிக்கைகள் காரணத்தினால் குறித்த தங்கப் பொதியை கொண்டு செல்ல முடியாததால், பின்னர் கொண்டு செல்லும் நோக்கத்துடன் தோரயடி குளத்தில் விட்டு சென்றதாக நம்பப்படுகின்றது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 04 கிலோ 740 கிராம் தங்கம் அடங்கிய பொதி மற்றும் குறித்த டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.