இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீன்பிடி படகுகள் வடமேற்கு கடற்பரப்பில் வைத்து கைது

இலங்கை கடற்படை, கடலோர காவல் படையுடன் இணைந்து 2024 ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி மன்னாருக்கு தெற்கே, வடமேற்கு கடற்பரப்பில், குதிரைமலை முனையில், மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) இந்திய படகுகளுடன் முப்பத்தைந்து (35) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீன்பிடிக் படகுகள் இந்நாட்டின் கடற்பகுதியில் அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, 2024 ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி, இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல இந்திய படகுளை வடமேற்கு கடற்படைக் கட்டளையால் கண்காணிக்கப்பட்டதுடன் குறித்த படகுகளை இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் விரட்டுவதற்கான விசேட நடவடிக்கைக்காக, மேற்கு கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான கடலோர காவல்படையின் படகொன்று அனுப்பப்பட்டது. அங்கு மன்னாருக்கு தெற்கே, குதிரைமலை முனைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) இந்திய படகுகளுடன் முப்பத்தைந்து (35) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட நான்கு (04) இந்திய படகுகள் மற்றும் முப்பத்தைந்து (35) இந்திய மீனவர்கள் கல்பிட்டி, இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உடுள்ளனர்.

இந்த நடவடிக்கையுடன், 2024 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட நாற்பத்து நான்கு (44) இந்திய மீன்பிடிப் படகுகளும், முந்நூற்று இருபத்தி இரண்டு (322) இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.