சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட கடலட்டைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சிலாவத்துறையில் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து இன்று (2024 ஆகஸ்ட் 13) காலை சிலாவத்துறை, புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, வீடொன்றில் விற்பனைக்காக தயார் படுத்தப்பட்டிருந்த சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட கடலட்டைகள் சுமார் நானூற்று எண்பத்திரண்டு (482) தொகையுடன் ஒரு (01) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று (2024 ஆகஸ்ட் 13) காலையில் வடமேற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் தேரபுத்த நிருவனத்தின் கடற்படையினர் மற்றும் சிலாவத்துறை பொலிஸார் சிலாவத்துறை, புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது. அங்கு குறித்த வீட்டில் விற்பனைக்காக தயார் படுத்தப்பட்டிருந்த சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட கடலட்டைகள் சுமார் நானூற்று எண்பத்திரண்டு (482) தொகையுடன் ஒரு (01) சந்தேக நபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் மற்றும் நானூற்று எண்பத்திரண்டு (482) கடலட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.