மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 09 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி கடைக்காடு கரையோரப் பகுதி மற்றும் அதற்கு அப்பாட்பட்ட கடல் பகுதியில் 2024 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகளின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட ஒன்பது (09) நபர்களுடன் ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை கைப்பற்றினர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்டை வெத்தலகேணி நிருவனத்தின் கடற்படையினர் 2024 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி கிளிநொச்சி கடைக்காடு கரையோரப் பகுதியிலும், கடைக்காடு பொன்னைத்தொடுவாய் பகுதிகளுக்கு அப்பால் அமைந்துள்ள கடற்பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒன்பது (09) மீனவர்களுடன் ஐந்து (05) டிங்கி படகுகள் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி, முள்ளியான், விஸ்வமடு, மன்னார், பறித்துதுறை, தெல்லிப்பளை மற்றும் குருநகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 23 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதோடு, குறித்த சந்தேகநபர்களுடன் டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.