தலைமன்னாரில் கரை ஒதுங்கிய சுமார் 208 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், தலைமன்னார் ஊறுமலை மற்றும் பழைய பாலம் கடற்கரையைஅண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் இருநூற்று எட்டு (208) கிலோ (ஈரமான எடை) பீடி இலைகள் கடற்படையிரால் கைது செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா நிறுவனத்தின் கடற்படையினர், 2024 ஆகஸ்ட் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் தலைமன்னார் ஊறுமலை மற்றும் பழைய பாலம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கரையொதுங்கியிருந்த மூன்று (03) பைகளில் இரண்டு (02) பார்சல்களில் பொதி செய்யப்பட்ட சுமார் இருநூற்று எட்டு (208) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.