சிலாவத்துறை பண்டரவேளி பகுதியில் வைத்து போதை மாத்திரைகள் பொதியொன்று கைது

இலங்கை கடற்படையும் பொலிஸாரும் இணைந்து 2024 ஆகஸ்ட் 17 ஆம் திகதி சிலாவத்துறை, பண்டரவேளி பிரதேசத்தில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் (Pregabalin Capsules) முந்நூற்று எண்பது (380) Pregabalin கைப்பற்றப்பட்டன.

அதன்படி, 2024 ஆகஸ்ட் 17 ஆம் திகதி சிலாவத்துறை, பண்டரவேளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையில், வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த நிறுவனத்தின் கடற்படையினர் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்டனர். அங்கு, குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த முந்நூற்று எண்பது (380) போதை மாத்திரைகள் இவ்வாரு பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.