கடற்படை வெள்ள நிவாரண குழுவொன்று களுத்துறை பரகொட பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ளது

சீரற்ற காலநிலையால் பெய்த கடும் மழை காரணமாக, இன்று (2024 ஆகஸ்ட் 18) களுத்துறை மாவட்டத்தின் பரகொட பகுதிக்கு கடற்படை வெள்ள அனர்த்த மீட்புக் குழுவொன்றை (01) அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்ஹள பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சிறிய வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக புளத்சிங்ஹள பரகொட பிரதேசத்திற்கு வெள்ள அனர்த்த மீட்புக் குழுவொன்று (01) அனுப்பி வைக்கப்பட்டதுடன் இன்று குறித்த நிவாரண குழுவினர் பரகொட பிரதேசத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், கடற்படையினர் வெள்ள அனர்த்த மீட்புக் குழுக்களையும் தேவைப்படும் போது அனுப்புவதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.