சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 748 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் 25 ஆம் திகதி கல்பிட்டி உச்சமுனே இப்பந்தீவு கடற்கரைப் பகுதிக்கு அப்பாற்பட்ட கடல் பகுதியில் மற்றும் வெள்ளமுண்தலம் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 748.6 கிலோ கிராம் பீடி இலைகள் (ஈரமான எடையுடன்) கைது செய்யப்பட்டன.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, 2024 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் கல்பிட்டி இப்பந்தீவு பகுதிக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் மிதந்த 15 பொட்டலங்களில் (சுமார் ஈரமான எடையுள்ள) பொதி செய்யப்பட்ட 499 கிலோ கிராம் பிடி இலைகள் கைது செய்தனர். மேலும் குறித்த கட்டளையின் உடனடி நடவடிக்கை படகுகள் படையணியால் வெள்ளமுந்தலம கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்கரையில் குவிந்து கிடந்த 07 பார்சல்களில் அடைக்கப்பட்ட 249.6 கிலோ கிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைது செய்யப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கைகளின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.