சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 1,076 கிலோ கிராமுக்கு அதிகமான பீடி இலைகளுடன் 02 டிங்கி படகுகள் மற்றும் ஒரு பாரம்பரிய படகு கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் நெடுந்தீவின் உரிமுனே கடற்கரை மற்றும் கல்பிட்டி குடாவ தடாகத்தில் 2024 ஆகஸ்ட் 28 ஆம் திகதி மற்றும் இன்று (2024 ஆகஸ்ட் 29) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த சுமார் ஆயிரத்து எழுபத்தாறு (1,076) கிலோகிராம் பீடி இலைகளுடன் (ஈரமான எடை) இரண்டு டிங்கி படகுகள் (02) மற்றும் ஒரு பாரம்பரிய படகு (01) கைப்பற்றினர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில், கடற்படையினர் தீவு முழுவதும் உள்ள கடல்பகுதி மற்றும் கடற்கரையோரங்களில் பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தின் கடற்படையினர் 2024 ஆகஸ்ட் 28 ஆம் திகதி நெடுந்தீவின் உரிமுனே கடற்கரைக்கு அருகில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, கரை ஒதுங்கிய ஒரு பார்சலில் பொதி செய்யப்பட்ட 34 கிலோ 500 கிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் இவ்வாறு கைப்பற்றினர்.

மேலும், வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் இன்று (29 ஆகஸ்ட் 2024) கல்பிட்டி குடாவ தடாகத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு டிங்கிகள் (02) மற்றும் ஒரு பாரம்பரிய படகு (01) ஆகியவை அவதானித்து பரிசோதித்தனர். அங்கு, கூறப்பட்ட படகுகளில் சுமார் ஆயிரத்து நாற்பத்திரண்டு (1,042) கிலோகிராம் பீடி இலைகள் முப்பத்து மூன்று (33) பைகளில் பொதி செய்யப்பட்டிருந்தன. அதன்படி, குறித்த பீடி இலைகள் மற்றும் படகுகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

மேலும், இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தின் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட பீடீ இலைகள் மற்றும் படகுகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேற்கு மாகாண கலால் விசேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.