வர்த்தக வெடிபொருட்களை பயன்படுத்தி பிடித்ததாக சந்தேகிக்கப்படும் 1865 கிலோகிராம் மீன்களுடன் சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் திருகோணமலை நிலாவெளி கடற்கரைப் பகுதியில் இன்று (2024 ஆகஸ்ட் 30) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வர்த்தக வெடிபொருட்களை பயன்படுத்தி பிடித்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தைந்து கிலோகிராம் (1865) மீன்கள் விற்பனை செய்யத் தயாராகிக்கொண்டிருந்த நபர் ஒருவருடன் (01) குறித்த மீன் பொதி கைது செய்யப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மற்றும் சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று (2024 ஆகஸ்ட் 30) திருகோணமலை நிலாவெளி கடற்கரைப் பகுதியில் கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜயபா நிருவனத்தின் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மீன்கள் சேகரிக்கும் இடமொன்று சோதனையிடப்பட்டது. அங்கு, வர்த்தக வெடிபொருட்களை பயன்படுத்தி பிடித்ததாக சந்தேகிக்கப்படும் எழுபத்தி இரண்டு (72) பெட்டிகளில் அடைக்கப்பட்ட ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தைந்து (1865) கிலோகிராம் கொண்ட மீன் கையிருப்பை விற்பனை செய்யத் தயாராக இருந்த ஒருவருடன், குறித்த மீன் பொதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபரையும் மீன்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.