சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 345 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் 31 ஆம் திகதி புத்தளம் எரம்புகொடெல்ல மற்றும் கப்பலடி கடற்கரை பகுதிகளுக்கு அருகில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முந்நூற்று நாற்பத்தைந்து (345) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கைப்பற்றினர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் 2024 ஆகஸ்ட் 31 ஆம் திகதி புத்தளம் எரம்புகொடெல்ல கடற்கரைப் பகுதிக்கு அருகில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கரையை நோக்கி மிதந்த நான்கு (04) பொதிகளில் இருந்த நூற்று அறுபத்து ஒன்பது (169) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் கப்பலடி கடற்கரைப் பகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கரையை நோக்கி மிதந்த ஐந்து (05) பொதிகளில் இருந்த நூற்று எழுபத்தாறு (176) கிலோ கிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) இவ்வாறு கைது செய்யப்பட்டன.

கடற்படையின் நடவடிக்கைகளினால் பீடி இலைகளை நாட்டுக்குள் கொண்டு செல்ல முடியாமல் கடத்தல்காரர்கள் கடற்பகுதியில் கைவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, மேலும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வரை கடற்படையின் காவலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.