சுமார் 75 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2024 செப்டெம்பர் 06 ஆம் திகதி மன்னார், பேசாலை கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நூற்றி எண்பத்தி எட்டு (188) கிலோகிராம் எடையுள்ள (ஈரமான எடையுடன்) ஐந்து (05) கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றினர்.

அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்தின் கடற்படையினர் குறித்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள கரையோர ரோந்துக் கப்பல் P151 ஐ பயன்படுத்தி 2024 செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி மன்னார் பேசாலை கடற்பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டுள்ளனர். அங்கு, குறித்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்த ஐந்து (05) பைகளை சோதனை செய்தபோது, குறித்த பைகளில் இருந்து சுமார் நூற்று எண்பத்தெட்டு (188) கிலோ முந்நூற்று இருபத்தைந்து (325) கிராம் கேரள கஞ்சா (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டன.

கடற்படை நடவடிக்கைகள் காரணமாக கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி சுமார் எழுபத்தைந்து (75) மில்லியன் ரூபா என நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையுடன் கடற்படை மற்றும் கடலோர காவல்படை திணைக்களம் இணைந்து 2024 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 1242 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது.