நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் 1180 கிலோகிராம் மற்றும் 20,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கற்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 12 ஆம் திகதி இரவு கற்பிட்டியின் சேரக்குளிய களப்பு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நூற்று எண்பது (1180) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் இருபதாயிரம் (20,000) வெளிநாட்டு சிகரெட்டுகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும், இரண்டு (02)
13 Aug 2025
பேசாலையில் ரூ.24 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

தலைமன்னார், குடியிருப்பு மற்றும் பேசாலைக்கு இடைப்பட்ட கரையோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 2025 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கடற்படையினரால் நூற்றுப் பத்து (110) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த தெரு மதிப்பு இருபத்தி நான்கு (24) மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும்.
13 Aug 2025
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் கற்பிட்டியில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2025 ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரவு கற்பிட்டி திகாலி பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, முந்நூற்று எழுபத்தொன்பது (379) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், ஆறாயிரம் (6000) வெளிநாட்டு சிகரெட்டுகள், இருநூற்று எண்பத்தோராயிரத்து இருநூறு (281200) மருந்து மாத்திரைகள் மற்றும் ஆயிரத்து இருநூற்று தொண்ணூற்றொன்று (1291) மருந்து ஊசிகளுடன் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு (01) சந்தேக நபருடன் பறிமுதல் செய்யப்பட்டன.
13 Aug 2025
சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுப்பதற்கான கடற்படையினரின் நடவடிக்கைகளில் 16 சந்தேக நபர்களுடன் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை, கடந்த இரண்டு வாரங்களில் (2025 ஆகஸ்ட் 01 முதல் 10 வரை) உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பதினாறு (16) சந்தேக நபர்களையும், ஆறு (06) டிங்கி படகுகள் மற்றும் ஒரு (01) படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
12 Aug 2025
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1590 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

நீர்கொழும்பு, புத்தளம் மற்றும் முகத்துவாரம் களப்பு மற்றும் கடல் பகுதிகளில் 2025 ஆகஸ்ட் 01 முதல் 10 வரை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட (1590) ஆயிரத்து ஐநூற்று தொண்ணூறு கிலோகிராமை விட அதிகமாக பீடி இலைகளுடன் ஒரு (01) சந்தேக நபர் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.
12 Aug 2025
காலி மீன்பிடி துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ கடற்படையின் உதவியுடன் வெற்றிகரமாக அணைக்கப்பட்டது

காலி மீன்பிடி துறைமுக வளாகத்தில் பயன்படுத்தப்படாத மீன்பிடி கப்பல்கள் வைக்கப்பட்டுள்ள முற்றத்தில் இருந்த (01) மீன்பிடிக் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்கவும், தீ பரவாமல் தடுக்கவும் இன்று (2025 ஆகஸ்ட் 10) தெற்கு கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த கடற்படை தீயணைப்புக் குழுவினரால் உதவிகள் வழங்கப்பட்டன.
10 Aug 2025
உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 09 பிற்பகல் மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்நாட்டு நீர்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
10 Aug 2025
அனுராதபுரத்தில் 6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து அனுராதபுரம் சல்காடு மைதானத்திற்கு அருகில் 2025 ஆகஸ்ட் 04 ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, இருபத்தி ஒன்பது (29) கிலோகிராம் மற்றும் தொள்ளாயிரத்து ஒரு (901) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற (01) மோட்டார் வாகனத்துடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
07 Aug 2025
கற்பிட்டி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், கற்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் 2025 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இரவு மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய மீன்பிடி படகு (01) மற்றும் பத்து (10) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.
06 Aug 2025
யாழ்ப்பாணம் கடைக்காடு பகுதியில் ரூ.23 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம், கடைக்காடு, அலியாவேலி கழப்பு அருகே இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நூற்று இரண்டு (102) கிலோகிராம் மற்றும் முந்நூற்று ஐம்பது (350) கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா, இருபத்தி மூன்று (23) மில்லியன் ரூபாயை விட அதிகமான தெரு மதிப்புள்ள ஒரு தொகையை கடற்படையனர் 2025 ஆகஸ்ட் 04 அன்று கைப்பற்றினர்.
05 Aug 2025