நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2020 ஜூலை 24 ஆம் திகதி வட மத்திய மற்றும் கிழக்கு கடற்படைக் கட்டளைகளில் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற நடவடிக்கைகளின் போது, 09 கிலோவிற்கு மேற்பட்ட கேரள கஞ்சா மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொருட்களை வைத்திருந்ததாக 04 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.