கடற்படையினரால் மன்னார், சவுத்பார், இருக்கலம்பிட்டி கடற்கரை பகுதியில் மற்றும் மன்னாரின் தெற்கு கடற்பகுதியில் 2021 செப்டம்பர் 16, 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற 3704 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் 04 உள்ளூர் சந்தேகநபர்கள் மற்றும் ஒரு டிங்கி படகும், 06 இந்திய சந்தேக நபர்கள் மற்றும் ஒரு இந்திய (01) படகும் கைது செய்யப்பட்டன.