நடவடிக்கை செய்தி
பொல்பித்திகம, மாஎலிய பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி
பொல்பிதிகம மாஎலிய பிரதேசத்தில் உள்ள திகிலிய மலை வனச்சரகத்தில் 2022 மார்ச் 27 ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் தீயை அணைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது (2022 மார்ச் 28) தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படை தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
29 Mar 2022
1418 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்
இலங்கை காவல்துறைனருடன் இணைந்து இலங்கை கடற்படையினர் 2022 மார்ச் 27 ஆம் திகதி மன்னார் உப்புக்குளம் பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1418 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட வலைகளுடன் (Monofilament Nets) சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
28 Mar 2022


