இலங்கை கடற்படை, இலங்கை கடலோரக் காவல்படை, அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து 2022 ஏப்ரல் 12ஆம் திகதி மாலை காலி, தொடந்துவ கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட அதிரடி நடவடிக்கையின் போது கடல் வழியாக நாட்டுக்குள் கடத்த முயச்சித்த ஹெரோயின் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 300 கிலோ எடையுள்ள போதைப்பொருள் மற்றும் ஐஸ் என சந்தேகிக்கப்படுகின்ற போதைப்பொருள் 25 கிலோவை கொண்ட உள்நாட்டு பல நாள் மீன்பிடி படகொன்றும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு டிங்கி படகும், ஒரு கெப் மற்றும் முச்சக்கர வண்டிகளுடன் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டர்.