நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயன்று உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட 55 பேர் ஆழ்கடலில் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்
ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 390 கடல் மைல் (சுமார் 722 கி.மீ) தொலைவில், இலங்கைக்கு தென்கிழக்கு பகுதி ஆழ்கடலில் வீசிய புயலில் சிக்கி பாதிக்கப்பட்ட உள்நாட்டு பல நாள் மீன்பிடிக் கப்பலில் உயிருக்கு ஆபத்தில் இருந்த சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 55 பேர் இலங்கை கடற்படையினரால் 2022 ஜூலை 10ஆம் திகதி மீட்கப்பட்டதுடன், அவர்களை இன்று (2022 ஜூலை 12) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டனர்.
12 Jul 2022
வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் 2022 ஜூலை 11 ஆம் திகதி மாலை மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
12 Jul 2022


