நடவடிக்கை செய்தி
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கை கடற்பரப்பில் மிதந்த இந்திய மீன்பிடி படகு கடற்படையினரால் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கைக் கடற்பரப்பிற்கு வந்தடைந்த இந்திய மீன்பிடிப் படகொன்று பருத்தித்துறையில் இருந்து 26 கடல் மைல் (சுமார் 48 கிமீ) தொலைவில் வடக்கு கடற்பரப்பில் உள்ளதை இலங்கை கடற்படையினரால் அவதானிக்கப்பட்டதுடன் குறித்த படகுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் வழங்கி சர்வதேச கடல் எல்லைக்கு இழுத்துச் செல்லப்பட்டு இந்திய கடலோர காவல்படையின் எனீ பெசன்ட் (ICGS Annie Besant) கப்பலிடம் இன்று காலை (2022 செப்டம்பர் 28) இலங்கை கடற்படையால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
28 Sep 2022
சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 06 பேர் கடற்படையினரால் கைது
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 06 பேர் மன்னார் மணற்பரப்பைச் சூழவுள்ள கடற்பரப்பில் 2022 செப்டெம்பர் 27 ஆம் திகதி காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.
28 Sep 2022
தொட்டலங்க பகுதியில் ஏற்பட்ட அவசர தீயை அணைக்க கடற்படையின் உதவி
தொட்டலங்க கஜிமாவத்த பகுதியில் 2022 செப்டெம்பர் 27 ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் தீயை அணைப்பதற்கும் தீ பரவாமல் தடுப்பதற்கும் இரண்டு (02) கடற்படை தீயணைப்பு குழுகள் உதவினர்.
28 Sep 2022


