நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 45 பேர் காலி ஹபராதுவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 45 பேர் காலி ஹபராதுவ கரையோரப் பகுதியில் இன்று (2022 ஒக்டோபர் 23) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அந்த பகுதியில் உள்ள தங்குமிடமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

23 Oct 2022