நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து வடகடலில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கைப்பற்றப்பட்டது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக வடக்கு கடற்பரப்பில் 2022 ஒக்டோபர் 26 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று 07 இந்திய மீனவர்களுடன் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு தெற்கு இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டன.

27 Oct 2022