இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து 2022 நவம்பர் 07 ஆம் திகதி பேருவளை, டயஸ்வத்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது அப்பகுதியில் உள்ள தோட்டமொன்றில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 08 கிலோ 304 கிராம் (பொதி எடையுடன்) ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார். இதன் வீதி பெறுமதி 166 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.