நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 03 பேர் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, இப்பன்தீவு கடல் பகுதியில் 2023 பெப்ரவரி 04 ஆம் திகதி காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 03 பேருடன் 17 வாலம்புரிகள், சுழியோடி உபகரணங்கள், 671 கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

05 Feb 2023