இலங்கை கடற்படையினரால் இன்று (2023 பிப்ரவரி 09) அதிகாலை புத்தளம், சேரக்குளிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 239 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் (ஈரமான எடை) மற்றும் 921 கிலோகிராம் சுறா துடுப்புகள் (ஈரமான எடை) கொண்ட இரண்டு லொறிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.