நடவடிக்கை செய்தி

58 வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிபொருட்களுடன் 02 சந்தேகநபர்கள் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்

2023 மார்ச் 18 ஆம் திகதி திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 58 வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிபொருட்கள் மற்றும் 100 டெட்டனேட்டர்களுடன் 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

19 Mar 2023