நடவடிக்கை செய்தி

மின்சார ஒளியை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகம் இணைந்து 2023 ஏப்ரல் 18 ஆம் திகதி இரவு திருகோணமலை, நயாறு மற்றும் அலம்பில் கடற்பரப்பில் மேற்கொன்டுள்ள விசேட நடவடிக்கையின் போது மின்சார ஒளியை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட எட்டு பேர் (08) நான்கு 04) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

19 Apr 2023