நடவடிக்கை செய்தி

வடகடலில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 10 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் குதிரிப்பு, வெத்தலக்கேணி மற்றும் நாகர்கோவில் கடற்பரப்பில் 2023 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 10 பேர், சுழியோடி உபகரனங்கள், சுமார் 1040 கடல் அட்டைகள் மற்றும் ஐந்து (05) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

27 Apr 2023