நடவடிக்கை செய்தி

சுமார் 2800 மில்லியன் ரூபா பெறுமதியான 121 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள் தென் கடலில் வைத்து கடற்படையினரால் கைது

அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கைக் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட புலனாய்வு நடவடிக்கையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு தெற்கு தெவுந்தர பகுதியில் இருந்து சுமார் 413 கடல் மைல் (சுமார் 764 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் சுமார் 111 கிலோ 606 கிராம் (பொதி எடையுடன்) ஹெரோயின் மற்றும் 10 கிலோ 254 கிராம் ஹஷிஸ் (பொதி எடையுடன்) போதைப்பொருளுடன் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று மற்றும் ஆறு சந்தேக நபர்கள் 2023 மே 13 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு மூலம் கைது செய்யப்பட்டது. குறித்த போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (2023 மே 18) காலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (மே 18) காலை கொழும்பு துறைமுகத்திற்கு சென்று கைப்பற்றப்பட்ட போதைபொருட்களை நேரில் பார்வையிட்டார்.

19 May 2023