நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட உலர் கடல் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கல்பிட்டி கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

கல்பிட்டி, சின்னாரிச்சாலை கடற்பரப்பில் 2023 மே 18 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 193 கிலோ கிராம் (ஈரமான எடை) உலர் கடல் அட்டைகள் மற்றும் பல கடத்தல் பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02), ஒரு டிங்கி படகு (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

19 May 2023