நடவடிக்கை செய்தி

உலர் கடல் அட்டைகள் உள்ளிட்ட பொருட்களுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து 2023 மே 19 ஆம் திகதி கல்பிட்டி ரொட்டபாடு கடற்கரைப் பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 603 கிலோகிராம் உலர் கடல் அட்டைகள் மற்றும் 11520 ஷாம்பு பாக்கெட்டுகளுடன் (தலா 6 மில்லி) 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

20 May 2023