நடவடிக்கை செய்தி

வர்த்தக வெடிபொருட்களுடன் பெண் ஒருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படையினர் குச்சவேளி பொலிஸாருடன் இணைந்து திருகோணமலை குச்சவேளி கசீம்நகர் பகுதியில் இன்று (2023 மே 22) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனையிட்டதுடன் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வர்த்தக வெடிபொருட்களின் ஐம்பத்து நான்கு குச்சிகள் (54) மற்றும் ஐம்பது (50) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களுடன் ஒரு பெண் (01) கைது செய்யப்பட்டார்.

23 May 2023

கடல் ஆமை இறைச்சியுடன் 02 சந்தேக நபர்கள் சிலாவத்துறையில் கைது

இலங்கை கடற்படையினரால் இன்று (2023 மே 22) மன்னார் சிலாவத்துறை அரிப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு (02) உயிருள்ள ஆமைகள் உட்பட ஆமை இறைச்சியுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

22 May 2023