மோசமான வானிலை காரணமாக மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 ஜூன் 4 முதல் புலத்சிங்கள, பதுரலிய, லத்பந்துர மற்றும் கலவான ஆகிய இடங்களுக்கு கடற்படை நான்கு (04) நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளது. தற்போது நிவாரணக் குழுக்கள் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.