நடவடிக்கை செய்தி

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 26 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 ஜூன் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் லங்காபடுன கடற்பகுதி மற்றும் முல்லைத்தீவு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது உரிம நிபந்தனைகளை மீறி இரவு நேர சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருபத்தி ஆறு (26) பேர், ஒன்பது (09) படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைது செய்துள்ளனர்.

15 Jun 2023