நடவடிக்கை செய்தி

கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக முல்லைத்தீவு கோக்கிளாய் களப்பு மற்றும் ஜின்னபுரம் கடற்பகுதியில் 2023 ஜூன் 15 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள், 04 படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

16 Jun 2023

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த பீடி இலைகள் நெடுந்தீவில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் 2023 ஜூன் மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம், நெடுந்தீவில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் கரை ஒதுங்கி உள்ள சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் எழுநூற்று இருபத்தி ஒன்பது (729) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) கைது செய்யப்பட்டனர்.

16 Jun 2023