நடவடிக்கை செய்தி

கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் தம்பலகமுவ பகுதியில் கைது

திருகோணமலை, தம்பலகமுவ, மீரா நகர் பகுதியில் 2023 ஜூன் 26 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இனைந்து நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் ஒரு வீட்டில் விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட சுமார் ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

27 Jun 2023