நடவடிக்கை செய்தி

சுமார் 28 மில்லியன் ரூபாய்க்கு மேல் பெறுமதியான கேரள கஞ்சா வடகடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் 2023 ஜூலை 23 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம், குடைரிப்பு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பகுதியில் மிதந்த 86 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டுள்ளது.

24 Jul 2023

வடக்கு கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 ஜூலை 21 மற்றும் 22 திகதிகளில் யாழ்ப்பாணம் கதைக்காடு மற்றும் வெத்தலக்கேணி கடற்பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது மின் விளக்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதினாறு (16) பேருடன் பதினொரு (11) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்களைக் கைப்பற்றினர்.

24 Jul 2023