நடவடிக்கை செய்தி

தெற்கு கடற்பரப்பில் தீப்பிடித்த உள்நாட்டு மீன்பிடி படகில் இருந்த 07 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

காலி கலங்கரை விளக்கத்திலிருந்து சுமார் 58 கடல் மைல் (சுமார் 107 கி.மீ) தொலைவில் இலங்கைக்கு மேற்கு ஆழ்கடலில் தீப்பிடித்த பல நாள் மீன்பிடிப் படகில் இருந்து மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் இலங்கை கடற்படையினர் 2023 ஆகஸ்ட் 11 ஆம் திகதி மேற்கொன்டுள்ளனர். குறித்த மீட்பு நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்ட ஏழு (07) இலங்கை மீனவர்கள், இலங்கை கடற்படை கப்பல் கஜபாகு மூலம் இன்று (2023 ஆகஸ்ட் 12) காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

12 Aug 2023