இலங்கைக்கு தெற்கு கடல் பகுதியில், இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் நோய்வாய்ப்பட்ட மீனவரொருவரை கரைக்கு கொண்டு வந்து வைத்திய சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல இலங்கை கடற்படையினர் இன்று (2023 ஆகஸ்ட் 21) நடவடிக்கை எடுத்துள்ளனர்.