இலங்கைக்கு கிழக்குக் கடற்பகுதியில் MV Empress எனும் உல்லாசக் கப்பலில் பயணித்த போது திடீரென சுகவீனமடைந்த இந்திய நாட்டவர் ஒருவரை கரைக்குக் கொண்டு வந்து சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க இலங்கை கடற்படையினர் இன்று (2023 ஆகஸ்ட் 29) நடவடிக்கை எடுத்துள்ளனர்.